Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி: தொழில் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் வழங்கினார்.

மே 27, 2021 08:09

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் மருங்கூர் வி.எம்.கேஷ் யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடலூர் மாவட்ட போலீசாருக்கு இரண்டு கட்டமாக 200 முழு உடல் கவசம் வழங்கினார். தொடர்ந்து வருவாய்துறை, பொதுசுகாதாரதுறை, மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு முககவசம், சானிடைசர் ஆகியவைகளையும், உணவின்றி தவித்த ஏழை எளிய குடும்பத்தினருக்கு அரிசி, காய்கனி ஆகியவை வழங்கினார்.

தற்போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கொரோனாநிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்